Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாருக்காய் பொங்குபோம் இனி?? : நோர்வே நக்கீரா

பொங்கல்களுக்கு என்றும் புதிரெடுப்பு
புதிர் புதிராய் புதிர்போட்டும் கதிரெடுப்பு ஏதுமில்லை
எல்லாமே களையெடுப்பு….வெறும் களையெடுப்பு

களை களை என்று களைந்து தள்ளி
கொலை கொலையாய் கொன்று குவிந்து- கடசியில்
களைக்காது களையாய் நின்றது களைகள்தானே
துரோகி துரோகியென உரமாய் விளைந்தது துரோகம்தானே.
மகிந்தரின் படுக்கையறையிலும் துரோகத்தின் தலைவன்.

வடக்கும் கிழக்காய் பொங்கல் சரிய
பொங்குதமிழ்களாய் எத்தனை நெருப்பு வைப்புக்கள்
நிலத்திலும் புலத்திலும் பொங்கியதமிழ் சரிந்தது எங்கே?

ஈசானமூலையில் (வடகிழக்கு)பொங்கிச்சரிவது நற்பயன்
நந்திக்கடலும் ஈசானமூலை வடகிழக்காகி என்ன பயன்?
எதிர்காலம் தமிழனுக்காய் பொங்கிப் படைக்குமா?
பொங்கித்தான் சிதைக்குமா? பொங்கிக் கருக்குமா?

பொங்கலோ பொங்கல் என்று தமிழையும் பொங்கினோம்.
இந்தியனும் சீனனுமாய்
கலைத்துக் கலைத்து பொங்கினார்களே
முள்ளிவாய்கால் வரை

தலைகளை அடுப்பாக்கி
தலைகளுவலுக்கு அடைவாகி
உடல்பானையில் உசுப்பேத்தி…உதிரமேற்றி
உப்புக்காய் மக்களின் கண்ணீர்ரை ஊற்றி
துப்பாக்கிகளை விறகாக்கி
சுடுகலங்களால் தீபமேற்றி
30வருடமாய் பொங்கினோமே தமிழ்பொங்கல்.
பொங்கிப் பெருகியதே நந்திக்கடலில்
எந்தக்கடலுக்காய் பொங்குவோம் இனி;????

அமெரிக்காவை அழைத்து விருந்துவைக்க
ஈசானமூலையில் பொங்கல் சரித்தோம்
பொங்கித்தள்ளியதையா நந்திக்கடலில்
கப்பல் கப்பலாய் அள்ளவந்தது அமெரிக்கா
கப்பென்ற போனபின் சப்பெனப்போனது அமைதி
அமைதியே அமைதியானது அடிமைகளாக

ஊரிலே பொங்கிட உலகெல்லாம் அரிசி சேர்த்து
ஊரில் உழைக்க மறுத்து
ஊருக்குவெளியே பொங்கியதால்
பொங்கலும் அரையவியல்
நந்திக்கடலில் பிணக்குவியல்
எந்தச்சூரியனுக்கு பொங்குவோம் இனி?

போருக்குப் பிச்சையெடுத்து பதுக்கிய பணத்திலே
யார்யாருக்கே பத்து பத்துவீடு
தங்கப்பானையில் பொங்கும் பேறு
வீறுகொண்டு எழுந்த மக்கள்- இன்று
நாறிப்போன நிலத்தின் முட்கள்.
யாருக்காய் பொங்குவோம் இனி?

வன்னியில் தூறினால்
வெளிநாட்டில் வெள்ளம்
கன்னியொருத்தி கருவுற்றால்
கண்ணீரில் இங்கே வள்ளம்
ஆடுக்குட்டிக்கு ஓநாய் காவல்.

ஊரில் ஒருத்தி கற்பிணி
புலத்தில் அது கற்பழிப்பு
அரசியலில் கொந்தழிப்பு
புலத்திலே நிதிதிரட்டி –தம்
பிள்ளைக்கு வீடுகள்கட்டி
கற்புக்கொடுக்கக் கற்றுக்கொடுப்பார்
யார்வீட்டில் பொங்குவோம் இனி??

ஊரை அடித்து உலையில் போட்டபணம்
வீடு கடை என்று எழும்புகிறது தினம் தினம்
மனைவி மக்கள் கழுத்தில் நகைகளின் கனம்
ஊரையடித்த பணத்தில் கெலிக்கொப்டரில் திருமணம்
பால்குடித்த மகனே மார்பிலுதைத்த போது
அன்னியனை நம்பி இனி பொங்கல் எமக்கேது?

உணவு ஊட்டிய கைகளில்
மூட்டிய நெருப்பு
காட்டிய ஒளியில் நாம் கண்டது அனைத்தும்
அரக்கர்களின் இருப்பில் துரோகத்தின் தளைப்பு.
மனிதத்தின் மறுப்பில் மானிடரின் வெறுப்பு

நம்பி நம்பி தோற்ற தம்பி
நம்பி எப்படிப் பொங்குவது இனி
நம்பிக்கையில் கை வைத்து- நீங்களே
தன்னம்பிக்கையை பொங்கிடுங்கள்
பொலிந்திடும் வாழ்க்கை உங்கள் கைகளில்

பொங்கல் கொண்டு வரும்
 

Exit mobile version