Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போருக்கும் எப்போதுமே ஒத்துழைப்பு உண்டு :ஜெயலலிதா.

09.10.2008.

அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கைத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போருக்கும், அவர்கள் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு தங்களுக்கென சுயாட்சி பெற்ற தாயகத்தை அடையும் வேட்கையினை புரிந்துகொள்வதாகவும், ஏற்றுக்கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

வியாழக்கிழமை அவர் சென்னையில் வெளியிட்ட அறிக்கையில், சமத்துவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் நெடிய போராட்டத்தை தாம் எப்போதுமே ஆதரித்து வந்தவர் என்றும், ஆயுதமேந்திய போராட்டம் திசை மாறிப் போய் சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்ததையும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே கொலை செய்யப்பட்டதையும் தான் எதிர்ப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

பயங்கரவாதத்தையும், இந்தியாவில் பொது அமைதிக்கு பங்கம் வருவதையும் அதன் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதையும் எதிர்க்கும் அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போருக்கும் எப்போதுமே தனது கட்சியின் நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தவிரவும் போர் காரணமாக இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்க்ளுக்கு உணவு, மருந்து உட்பட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Exit mobile version