Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடி பிரதமரானால் ராஜபட்ச மீது விசாரணை:ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது தொடரும் வைகோ இன் பிழைப்பு

vaikoநரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால் இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபட்ச மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இனக்கொலை என்பது பாசிசத் தத்துவார்த்த அடிப்படைகளை கொண்டது. நரேந்திர மோடி என்ற இனக்கொலையாளி ஹிட்லரின் தத்துவங்களை ஏற்றுக்கொண்ட இந்தியாவின் ராஜப்கச. தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று வெளிப்படையாகக் கூறுபவர்.

ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்ற போதும் இன்றும் அதற்கு ஆதரவாக மௌனம் சாதித்த மோடியினதும் பாரதீய ஜனதாவினதும் ஆட்சிக்காலத்தில் காங்கிரசிற்கு இணையாக இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவளித்தது. ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது வாக்குத்திரட்டும் வை,கோபாலசாமி இன்று இவர்களைப் புனிதப்படுத்துகிறார்.

சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ. மேலும் இலங்கை அதிபர் ராஜபட்ச செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version