Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடியின் உரை ரத்து

அமெரிக்காவில் வார்டன் பள்ளி (Wharton school ) எனும் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களால் இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் இந்தியப் பொருளாதாரம் குறித்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய காரணத்தை முன்வைத்து மோடியின் உரைக்கு மாணவர்கள் எதிர்ர்புத் தெரிவித்தனர்.
எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் நரேந்திர மோடியின் உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா 23 ஆம் தேதி அங்கு உரையாற்றுவார் எனத்தெரிகிறது.

Exit mobile version