Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லிம் காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியல் வெளிப்பட்டுள்ளது: சஜித்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் வெளிப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதிகார மோகம், சந்தர்ப்பவாத அரசியலையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போசித்து வருகின்றது.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனவாத ரீதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது.

எனினும், வாக்குறுதிகளை மறந்து மீளவும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் வாக்காளர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

Exit mobile version