Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடன் இணைந்து போட்டியிட மாட்டேன்!:ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புடனோ அல்லது ஆயுதக் குழுக்களுடனேயோ இணையாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தே போட்டியிடும் என அதன் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் தனியார் வானொலி ஒன்றிற்கு இன்றையதினம் பேட்டியளித்த ஆனந்தசங்கரி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்க் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்தனர். தமிழ் மக்களை புலிகள் பலிகொடுத்தபோது மௌனமாக இருந்த தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஒருசில ஆசனங்களுக்காக நான் இணையமாட்டேன். அதேபோல முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடனும் இணைந்து போட்டியிட மாட்டேன். இவ்வாறு ஆனந்தசங்கரி அப்பேட்டியில் தெரிவித்தார்.

Exit mobile version