Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் படுகொலை.

 

செச்சன்யாவைச் சேர்ந்த முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாக ரஷ்யாவின் தென்பகுதி நிர்வாகம் கூறியுள்ளது.

அண்டை பிராந்தியமான இங்குசெட்டியாவில், காட்டில் இருந்து நதல்யா எஸ்டிமிரோவா அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதனன்று காலை செச்சன்ய தலைநகர் குரொஸ்னியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நான்கு ஆயுதபாணிகளால் அவர் கடத்தப்பட்டபோது, அவர் அலறியதை பலர் கேட்டிருக்கிறார்கள்.

செச்சன்யாவில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆவணங்க்ளை சேகரித்திருந்த எஸ்டிமிரோவா, 2006 ஆம் ஆண்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரஷ்ய செய்தியாளரான அனா பொலிட்கோவஸ்காயா அவர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.

Exit mobile version