குறுந்தேசிய இனவாதிகள் பலர் இன்று மகிந்த சிறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்படும் முன்னாள் போராளிகள், அவலத்துள் வாழும் மக்கள் குறித்து எவ்வித சிந்தனையுமின்றி இலஙகை அரச பாசிசத்துடன் கைகோர்த்துக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது விடுதலைப் புலிகளின் அதி முக்கிய உறுப்பினர் ஒருவரான சங்கர் மகிந்த அரச சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரமுகர் ஜமசுமு சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட பெருண்மிய பொறுப்பாளராக இருந்த சங்கர் என்றழைக்கப்படும் கமலநாதன் என்பவரே ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேசசபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடகின்றார். அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த த. கமலநாதன் விடுதலைப்புலிகள் அமைப்பில் அம்பாறை பொருண்மியப் பொறுப்பாளராக செயல்பட்டவர்.