Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதலீடாக்கப்பட்ட அவலங்கள் : தோழர் மருதையனின் நேர்காணல் காணொளி

mutramபிரான்சின் இருதயப்பகுகுதியில் லா டிபென்ஸ் என்ற இடத்தில் அணையா விளக்கும் அதனைச் சுழவரக் காணப்படும் உலக யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களது நினைவுச் சின்னங்களும் பாரிஸ் நகரின் வருவாயை அதிகரிக்கும் மூலங்கள். இதே போன்று புலம்பெயர் சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்டு தமிழ் நாட்டில் நடராஜன் என்ற ஊழல் பேர்வழியின் முதலீட்டில் உருவாக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம். காலம் முழுவதும் தமிழ்ப் பேசும் மக்களின் எதிரியாகச் செயற்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கொல்லப்பட்டவர்களின் நினைவு முளைப்பதற்குக் கைகொடுத்தவர் நெடுமாறன். நடராஜனின் பணமுதலீட்டை நெறியாள்கை செய்தவர் அவரே. இது குறித்த முழுமையான விவரணத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையனின் காணொளி தருகிறது.

Exit mobile version