Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீனவர் படுகொலை, எரிபொருள் விலையேற்றம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல்..

கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. .
ஆர்ப்பாட்ட பேரணியில் சென்றவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் .
எரிபொருள் விலையேற்றம், மீனவர் படுகொலை போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மீது தாக்குதல்

Exit mobile version