Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீனவர் கொலை : தமிழ்த் தேசிய எழுச்சியின் முன் கருணாநிதி

“த‌மிழக ‌மீனவ‌ர் செ‌ல்ல‌ப்ப‌ன், ‌சி‌றில‌ங்க கட‌ற்படையா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்டு கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து எனக்கு செய்தி தெரிந்ததும் உடனடியாக நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய்க்கான நிதியினையும் அரசின் சார்பில் வழங்கிடக் கூறியதோடு, பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் அன்றைய தினமே கடிதங்களையும் எழுதினேன். 8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.” என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கம் என்ற மாயையில் இன்னும் தமிழகத்தைக் ஒடுக்க முடியத அளவிற்கு தமிழ் தேசிய அடையாளத்திற்கான எழுச்சிகள் தமிழகத்தில் உருவாக ஆரம்பித்துள்ளன. பகுத்தறிவு வாதியான பெரியாரின் திராவிடக் கோசம் சமரசத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்த வாதம். இன்றைய அதிகாரவர்க்கம் சமரசத்திற்குத் தயாரற்ற கோரமுகத்தைக் கொண்டது. இதன் மறுபக்கமாகவே தேசிய வாத எழுச்சிகள் ஈழப் பிரச்சனை அனுபவங்களிலிருந்து உருவாகி வளர்ச்சியடைந்து வருகின்றன. தமிழ்க இடது சாரி இயக்கங்கள் தேசிய எழுச்சிக்கான தலைமைய வழங்குவதென்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

Exit mobile version