Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களது உடைமைகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.

19 படகுகளில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாகக் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.எனினும் அனைவரும் இன்னும் கரை திரும்பாததால் தாக்குதலுக்கு உள்ளானோரின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நாகை மீனவர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்றும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version