Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் முளைவிடும் மகிந்த பாசிசம் : நுகேகொடையில் கூட்டம்

மீண்டும் முளைவிடும் மகிந்த பாசிசம் : நுகேகொடையில் கூட்டம்முன்னை நாள் இலங்கை ஜனாதிபதி பாசிஸ்ட் மகிந்த ராஜபக்ச எந்தக் குற்றச் செயல்களுக்காகவும் இன்னும் தண்டனைக்கு உடபடுத்தப்படவில்லை. இதேவேளை மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நியமிக்குமாறு நேற்று மாலை நடைப்பயணம் ஒன்று நடைபெற்றுள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்த அனைவரும் கலந்துகொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை,வடக்குக் கிழக்கு தமிழர்களாலேயே தான் தோல்வியடைந்ததாகவும் அடிப்படையில் தான் வெற்றியடைந்துள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

நுகேகொட கூட்டம் மகிந்தவின் ஆதரவுத் தளம் இன்னும் சரிவடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது குடும்ப அரசியல் வட்டத்திற்கு எதிராகவும் இன்றைய அரசு புதிதாக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

பேச்சளவில் ஊழல்கள் தொடர்பான பிரச்சாரங்கள் ஆரம்ப நாட்களில் முன்னெடுக்கப்பட்ட போதும் குறிப்பான நடவடிக்கைகள் எதனையும் புதிய அரசு மேற்கொள்ளவில்லை. வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டுக்கள், கொலைக் குற்றங்கள் போன்றவை ராஜபக்சவை அழிக்கப் போதுமானவை எனினும் புதிய அரசின் பின்னணியிலிருக்கும் ஏகபோக அரசுகள் ராஜபக்சவைப் பாதுகாக்க விரும்புகின்றன.

Exit mobile version