மீண்டும் பேராட்டத்தின் பெயரால் பிரித்தானியாவில் பணம்திரட்டும் தமிழ் மாபியாக்கள்
இனியொரு...
பிரித்தானியாவில் ரூட்டிங் பகுதிகளில் இலங்கையில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப் போவதாக பணம் திரட்டும் நடவடிகளை சிலர் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் பல சிறு வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் பணத்தைச் சுரண்டிக்கொழுத்த மாபியாக் கூட்டங்கள் மீண்டும் மக்கள் பெயரால் முளைத்தெழுகின்றன. அவலத்தில் வாழும் மக்களின் பெயரால் பணம் சேகரிக்கும் மாபியாக்களுக்கு எதிரான செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் அணிதிரண்ட அளவில் முன்னெடுக்கபட வேண்டும். மரணித்த போராளிகள், மதம். மக்களின் அவலம் ஆகியன இந்த மாபியாக்களின் பணத்திரட்டலுக்கான அடிப்படைகளாக அமைகின்றன.