
இலங்கை குற்ற விசாரணைகள் நிலையத்தினால் கடந்த 25ம் திகதி கொழும்பு கோட்டை பிரதான நீதவானுக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையின் படி இச் சந்தேக நபர்கள் இருவருக்கெதிராக நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இது போலவே கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இப்பொழுது, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவில் உதவியாக இருந்த குமரன் பத்மநாதன் (கே.பி) இனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் (NERDC) செயற்பாட்டார்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.