Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டுகளை உடனடியாக அழிக்க முடியாது : மத்திய அரசு

மாவோயிஸ்டுகளை வேரோடு அழிப்பது ஒரு நீண்ட பணி.அதற்கு நீண்ட காலம் ஆகும். பாதிப்புகள் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் அவர்களை (மாவோயிஸ்டுகள்) ஆழ ஊடுருவ விட்டுவிட்டீர்கள்.

பெரிய எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டுகளை நாங்கள் தினமும் பிடித்து கைது செய்து கொண்டுதான் இருக்கிறோம்.அதனால்தான் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.

தங்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் அழுத்தத்தை அவர்கள் உணர்ந்துகொண்டுவிட்டனர்; இது தொடரும்.

மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையில், சுமார் 1,50,000 க்கும் அதிகமான காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

மாவோயிஸ்டுகள் வன்முறையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் பேச்சுவார்த்தைக்கு அரசும் தயாராகவே உள்ளது. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.

Exit mobile version