
அணுசக்தி ஒழுங்குமுறை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் நாளை மறுநாள் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். 4.57 மீட்டர் நீளம் உடைய 163 எரிகோல்களிலும் எரிபொருள் நிரப்பப்படும். இப்பணிக்கு 2 வார காலம் தேவைப்படும்.
மேலும் எரிபொருள் நிரப்பும் பணியை பார்வையிட அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளும் கூடங்குளம் வருகை தர உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வடபகுதி, தமிழகதின் கரையோரப் பகுதிகளை அணுக் கதிவீச்சுக்கு அபாயத்திற்கு உள்ளாக்கவல்ல மனிதக் கொல்லியான அணு உலையை மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்திய – தமிழக அரசுகள் இயங்கச் செய்கின்றன.
தொடர்புடைய பதிவுகள்: