Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மழை வெள்ளத்தில் முகாம் மக்கள். உண்ணவோ, உறங்கவோ இடமில்லை : ஒளிப்படங்கள்

 

 

 

கடந்த மூன்று தினங்களாக வன்னியில் பெய்து வரும் கடும் மழையினால் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் முகாம்கள் மூழ்கியுள்ளது. சூழ்ந்துள்ள செம்மண் கலந்த மழை நீருக்கு மத்தியில் கொட்டகைக்குள் உடகாரக் கூட இடமில்லாமல் கடந்த இரு நாட்களாக மக்கள் வெள்ளம் வடிந்துள்ள இடங்களில் அமர்ந்துள்ளனர். ஆனால் மழைச்சூழலில் சமைத்துண்ணும் சூழல் பாதிப்படைந்துள்ள நிலையில் மிக மிக சொற்பமான உணவுகளே அவர்களுக்கு கிடைப்பதாகவும். குழந்தைகளை வைத்துக் கொண்டு மழை வெள்ளத்திற்குள் சிக்கியிருக்கும் அவர்களின் நிலை பரிதாபகரமானது என்றும் அங்கிருந்து வரும் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டான இந்த இந்த நிலையிலாவது இராணுவம மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதி மறுத்து கடும் காவல் காப்பது வேதனையானது என்று வருத்தம் தோய்ந்த குரல்கள் ஈனஸ்வரத்தில் குமுறுகின்றன.யாராவ்து இந்த மக்களின் பிரச்சனைகளைப் பேசுங்களேன்.

Exit mobile version