Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மற்றோரு பேரினவாதக் கட்சியின் தலைவர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கவில்லை என்கிறார்.

இலங்கையில் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றானா ஐக்கிய தேசியக் கட்சி அமரிக்க சார்பு வலதுசாரிக் கட்சி என ஆரம்பத்திபிருந்தே அறியப்பட்டது.
நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவில்லை என இக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்கவில்லை என அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைதியானதும், ஜனநாயக ரீதியானதுமான முறையில் குரல் கொடுக்கவில்லை.
ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்க்கத் தவறின. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக இணைந்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

Exit mobile version