Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரமாட்டேன் : அனோமா

மன்னிப் புக்கோரி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யும் திட்டங்கள் எம்மிடம் இல்லை. அவர் (பொன்சேகா) எந்தவொரு குற்றத்தையும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

கேள்வி மனு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக 30 மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனையைப் பெற்றிருக்கும் சரத் பொன்சேகா வியாழன் மாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். பொன்சேகா மன்னிப்புக்கோரி வேண்டுகோள் விடுத்தால் தீர்ப்பை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐலன்ட் பத்திரிகை மேற்கோள்காட்டியிருந்தது. இந்நிலையிலேயே திருமதி பொன்சேகாவிடமிருந்து இக்கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

இதேவேளை, பொன்சேகாவின்விவகாரம் அரசியல் விவகாரம் அல்ல. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மூன்றாம் தரப்பின் தலையீடுகளால் இதற்கு தீர்வுகாண முடியாது என்று கோதாபய ராஜபக்ஷ கூறியதாக ஐலன்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால், தனது கணவருக்குத் தண்டனை வழங்கும் தீர்மானம் அரசியல் ரீதியானது என்றும் ஜனாதிபதியின் விருப்பங்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதென்றும் அனோமா கூறியிருக்கிறார்.

Exit mobile version