மன்னார் நகரப் பகுதியில் உள்ள பல இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டு சோதனை கெடுபிடிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் காவலரண்கள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல விதமான கெடுபிடிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.