Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்கள் அச்ச நிலை:மன்னார் நகரப்பகுதியில் மீண்டும் இராணுவ நிலையங்கள்!

மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்பட்டிருந்த இராணுவ காவல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும்   அச்ச நிலைதோன்றியுள்ளது.

மன்னார் நகரப் பகுதியில் உள்ள பல இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டு சோதனை கெடுபிடிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் காவலரண்கள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல விதமான கெடுபிடிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version