Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனித நேயம் : கோவை மு.சரளாதேவி

human

மனம் ஒன்றாநிலையில்

உடல்கள் ஒன்றினைந்து

உறவாடும் போது

மரணக் குழியில்

போராடிய மணநிலைதான்

உணரப்படும்
ஆனால்

மனம் ஒன்றிய நிலையில்

தொலைதூரம் இருந்தாலும்

உடலுரவின் உச்சகட்டத்தை

உணரமுடிகிறது
மனதைமிஞ்சிய

மகத்துவம் இல்லை

உடலைக் கடந்து

உணர்வோடு

உறவாடும் போது
மண்ணிலே

மனித நேயம்

தலைதூக்கி

வளரும்

Exit mobile version