Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலிஸ் கொலைவெறித் தாக்குதல்

14feb_malsknsமதுரை சட்டக்கல்லூரியில் பயிலும் புரட்சிகர மாணவர் முன்னணி தோழர்கள் மீது காவல்துறை கொலைவெறி தாக்குதல். 8 தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கைதிற்கு எதிராக சென்னை சட்ட்க்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மதுரையில் மாநகராட்சி ஊழியரைத் தாக்கிப் பெண் போலிசாரிடம் தவறாக நடந்துகொண்டதாக போலிக் குற்றச்சாட்டின் பேரில் போலிஸ் இவர்களைக் கைது செய்துள்ளதாக மாணவர்கள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

போலிஸ் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் -நீதிமன்ற உத்தரவை அடுத்து- மாணவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்குப் பொய்யாகத் திட்டமிடப்பட்ட வழக்கு என வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளனfர்

தமிழ் நாட்டில் ஜெயலாலிதாவும் அவரின் பரிவரங்களும் நடத்தும் பாசிச ஆட்சியில் மக்களின் ஒன்று கூடும் உரிமையும் பேச்சுச் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது.பரமக்குடியில் ஜெயலலிதா போலிஸ் நிராயுதபாணியான தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு இன்று வரை தொடர்கின்றது.

Exit mobile version