Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பு சிறைச்சாலையில் குண்டு வெடிப்பு : EPDP உறுப்பினர்கள் காயம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்துள்ளனர். இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில், தமது கட்சி உறுப்பினர்கள் நான்கு பேர் காயமடைந்ததாக ஈ. பி டி பி தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஈ பி டி பியின் ஏறாவூர் பிரதேச பொறுப்பாளர் ரவி உட்பட்ட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். இதேவேளை கடந்த வாரத்திலும் இந்த சிறைச்சாலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும்  அதிகாரிகள் தரப்பினரால் அந்தச் செய்தி மறுக்கப்பட்டிருந்தது.

Exit mobile version