Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்​கள்​தொ​கைக் கணக்​கெ​டுப்​பில் அர​வா​னி​களை தனிப் பாலி​ன​மாக அடை​யா​ளப்​ப​டுத்தி பதிவு செய்ய வேண்​டும்.​

  மக்​கள்​தொ​கைக் கணக்​கெ​டுப்​பில் அர​வா​னி​களை பதிவு செய்ய வேண்​டும் என்று கோரிக்கை எழுந்​துள்​ளது.​

 இது தொடர்​பாக அர​வா​னி​கள் உரிமை சங்​கத் தலைவி ஜீவா கூறி​யது:​

 சமூ​கத்​தில் ஒரு அங்​க​மா​கவே அர​வா​னி​கள் சமூ​கம் உள்​ளது.​ தமி​ழக அர​சின் அர​வா​னி​கள் நல​வா​ரி​யத்​தின் மூலம் அர​வா​னி​க​ளுக்கு பல நல்ல திட்​டங்​கள் செயல்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன.​

 தே​சிய அள​வில் அர​வா​னி​க​ளின் பாலின அடை​யா​ளம் பதிவு செய்​யப்​பட வேண்​டும்.​ எனவே,​​ வரும் மக்​கள்​தொ​கைக் கணக்​கெ​டுப்​பில் அர​வா​னி​களை தனிப் பாலி​ன​மாக அடை​யா​ளப்​ப​டுத்தி பதிவு செய்ய வேண்​டும்.​ கணக்​கெ​டுப்பு தொடர்​பான கருத்​துக் கேட்​புக் கூட்​டங்​க​ளில் அர​வா​னி​க​ளின் பிர​தி​நி​தி​கள் பங்​கு​பெ​றச் செய்ய வேண்​டும்.​ வரும் நாடா​ளு​மன்​றக் கூட்​டத்​தில் அர​வா​னி​க​ளின் பாலி​னம் குறித்த சட்​டம் இயற்​றப்​பட வேண்​டும்.​

 த​விர,​​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​யில் பாலி​னப் பிரி​வில் “மற்​ற​வர்​கள்’ என்று குறிப்​பி​டப்​ப​டு​வ​தற்​குப் பதி​லாக அர​வா​னி​கள் என்றே குறிப்​பி​டப்​பட வேண்​டும் என்​றார் ஜீவா.

Exit mobile version