Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்கள் போராட்டங்களைக் கண்டு அரசாங்கம் பீதி,மக்கள் மீது தாக்குதல்.

கொழும்பு, மாளிகாவத்தையில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .
போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி. உறுப்பினர் மீது தாக்குதல் .
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி காயமடைந்துள்ளார். சிலாபத்தில் எரிப்பொருள் விலையேற்றத்தை எதிர்த்து மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரும் அதிரடிப்படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

Exit mobile version