
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டதன் பின்னர் வன்னியில் நிரந்தர இராணுவ பயிற்சி முகாம்களை அமைக்கும் பணி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் அதிகளவு படையணிகள் வன்னியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் தற்போது காணப்படும் தற்காலிக இராணுவ முகாம்களுக்கு பதிலாக சகல வசதிகளுடன் கூடிய நிலையான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.