
இலங்கைக்கு தனிப்பட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் பாரத ரத்னா விருது மஹிந்தருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்த பெருமைக்கு உரியவர் மஹிந்தர் என்பதால் இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இவ்விருதை பெற்றவர்களில் இந்தியவர்கள் அல்லாதவர்கள் இருவர். ஒருவர் கான் அப்துல் கப்பார் கான். மற்றவர் நெல்சன் மண்டேலா.
தமிழின் விரோதியான பார்பனீய வாதியான சுப்பிரமணியம் சுவாமி வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இலங்கை இந்திய அரசுகளுக்குச் சாரபாகச் செயற்பட்டவர். தமிழ் நாட்டில் மனிதாபிமானிகள் நடத்திய போராட்டங்களை எதிர்த்தவர்.ஜெயலலிதாவின் நண்பர்.