Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கருணாநிதி போராட்டம் அறிவிப்பு

karunanithiஇந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ச பயணம்செய்வதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் போது தமிழ் நாடு முதலமைச்சராகவிருந்த முத்துவேல் கருணாநிதி அறிவித்துள்ளார்.
டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கருணாநிதி தலைமையில் அன்பழகன், மு.க. ஸ்டாலின், கி.வீரமணி, சுப வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி “ராஜபக்ஷேவின் இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி எனது தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் டெசோ அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள். இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் பயிற்சி என்பதை ஏற்க முடியாது” என்று கூறினார்.
தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்களிலும் திறந்தவெளிச் சிறைகளிலும் அடைத்துவைக்கப்பட்டு விலங்குகள் போல நடத்தப்படுகின்ற தமது எல்லைக்கு உள்ளேயே நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கூட இந்த சந்தர்ப்பவாதக் கும்பல் குரல்கொடுப்பதில்லை.

Exit mobile version