கிழக்கு மாகாண 
பதவியேற்பதற்கு முன்பதாகவே தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுங்கள் என முஸ்லீம் காங்கிரஸ் இற்கு ஆலோசனை கூறியுள்ளார்.
‘தேர்தல் காங்களில் நாம் வாக்குகளை அடிப்படையாக கொண்டு செயற்பட்டிருக்கலாம். அல்லது உரையாற்றியிருக்கலாம். இருந்தபோதும் அதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு தற்போது மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிட்டியுள்ளது.’ என்றார்.
வாக்குக் கேட்கும் போது மக்களுக்கு அரசிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தமை வெறும் வாக்குப் பொறுக்குவதற்காகவே என இவர் முஸ்லீம் காங்கிரசிற்குக் கூற அந்தக் கட்சியும் அதனை உள்வாங்கிக்கொண்டு, வாலைச் சுருட்டிக்கொண்டு தனது எஜமானன் மகிந்த ராஜபக்சவின் கால்களில் சரண்டைந்துவிட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைப்பதனால் அக்கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது.
மேலதிகமாகவுள்ள இரண்டு மாகாண அமைச்சு பதவிகளில் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாயக்கவிற்கு வழங்கப்படும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களான எம்.மன்சூர், ஏ.எம்.ஜெமீல் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் ஆகிய மூவரில் இருவருக்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னை இப்பதவியில் அமர்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறிய நஜீப் ஏ. மஜீத் தொடர்ந்து கூறுகையில்,
எனது தந்தை 17 வருடங்களாக எம்.பி.யாக இருந்து மக்கள் சேவையாற்றினார். நான் 13 வருடங்களாக எம்.பி.யாக இருந்தேன். தற்போது முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.