Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த உதவியால் வெற்றிபெறவில்லை : காங்கிரஸ்

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கனரக ஆயுதப்பாவனையை நிறுத்தி, இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியை ஈட்டிக்கொடுத்ததாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்த தகவலை இந்திய காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
இந்தநிலையில், லலித் வீரதுங்கவின் தகவலை காங்கிரஸின் பேச்சாளர் ஸ்ரீ சத்யவ்ரட் செட்டுர்வேடி மறுத்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரமும், அரசியலும் இந்திய தேர்தலை பொறுத்தவரையில் இலங்கை விடயத்தை விட முக்கியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேர்தலின் போது, தமிழகத்தில் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகமும், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் இலங்கையின் விடயத்தில் அதிக கரிசனையை வெளிக்காட்டின.

இந்தநிலையில் எந்த ஒரு தனிக்கட்சியும் இந்த விடயத்தில்; தனியே நன்மையை பெறவில்லை என செட்டுர்வேடி சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version