
ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரை நியமிக்க முற்படுகின்றன. குறிப்பாக அமரிக்கா தலைமையிலான நகர்வுகள் இவ்வாறு அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் பிரித்தானியாவிற்கு புலிசார் அமைப்புக்களின் ஆதரவு வேண்டிப் பயணம் செய்த மங்கள சமரவீரவை உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் உட்பட மேலும் சிலர் லண்டனில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. மகிந்தவிற்குப் பிரதியீடாக மற்றொரு பேரினவாதக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கு அரசுகளின் தலைமையில் நடத்தப்படுகின்றன. இதற்கான போராட்டங்களும் புதிய அமைப்புக்களும் கருத்துக்களும் இலங்கை முழுவதும் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் செயற்படுத்தப்படுகின்றன.