Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவின் கொள்கைவகுப்பு மாநாடு : இந்தியா உதவி

காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேபல் ரிபரோவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் 19ஆவது மாநாடு, கொழும்பில் நேற்று ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளை வீழ்த்தியதற்காக இலங்கை ஜனாதிபதிக்குத் தங்களுடைய பாராட்டுக்களைக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவிப்பர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் இராணுவத் தளபதி அரசியலுக்கு வருவது என்பது இலங்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது எனத் தெரிவிக்கும் காங்கிரஸ் பிரமுகர், இது குறித்து மகிந்தவின் கட்சிக்கு ஆலோசனை வழங்குதலே பிரதான நோக்கம் என்கிறார்.
நேற்றைய கட்சிக்கூட்டத்தில் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் அமைச்சருமான கருணா உரை நிகழ்த்தினார்.

Exit mobile version