Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவின் அரசவை மருத்துவரின் கார் மீது துப்பாக்கிச் சூடு!

மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வைத்தியர் எலியந்த வையிட்டின் கார் மீது துப்பாக்கி பிரயோகம் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எதிரிசிங்க வீதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது. துப்பாக்கி சூடு இடம்பெறும் போது ‘வைத்தியர்’ எலியந்த வையிட் அந்த காரில் இருக்கவில்லை எனவும் அவரது சாரதி மாத்திரமே அதில் இருந்ததாகவும் சுட்டிகாட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண இதன் போது சாரதிக்கோ வேறு எவருக்கோ காயங்கள் ஏற்பட்டவில்லை என குறிப்பிட்டார்.
பின் ஆசனத்தில் அமர்ந்து பயணிப்பவர் மீது துல்லியமாக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தும் நோக்குடன் விசேட திறமை கொண்ட துப்பாக்கி தாரி ஒருவரே இதனை மேற்கொண்டிருக்கலாம் என சிரேஷ்ட உதவி இரசாயன பகுப்பாய்வாளர் பி.டி. மடவள தெரிவித்துள்ளார்.
குறித்த கார் மீது மூன்று துப்பாக்கி தோட்டாக்கள் ஊடறுத்துள்ளதுடன் அவை சரியான இலக்கை நோக்கியே பிரயோகிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் காரில் வைத்தியர் எலியந்த பயணிக்காமையினால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
பெல்லன்வில் ரஜமகா விகாரையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த விசேட பூஜை வழிபாடுகளுக்கு தேவையான சில உபகரணங்களை வைத்தியரின் தாயார் வீட்டிலிருந்து வைத்தியரின் சாரதி எடுத்துவந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகிந்த என்ற கோமாளி கிரிமினல் மன்னுக்கு எலியத்த வைட் என்ற கிரிமினல் வைத்தியரான கதை:

அரச மாளிகை ஊக்க மருத்துவர் : எம்.ரிஷான் ஷெரீப்

ஈலியந்த லிண்ட்ஸே வைட் என முழுப் பெயர் கொண்ட இவர் முன்பு கொழும்பு, பலாமரத்தடிச் சந்தியில் மறைவாக ஜாக்பொட் சூதாட்ட உபகரணங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, விளையாட விட்டும், அவற்றை வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதித்தவர்.

Exit mobile version