Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ப. சிதம்பரம் ரஜிநாமா நாடகம்.

கடந்த ஆறாம் தியதி இந்தியாவின் வடகிழக்கில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் படையைச் சார்ந்த 76 வீரர்கள் உயிரிழந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில் பலியான டில்லி வீரர்களின் இறுதி நிகழ்வு டில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தேண்டே வாடா சம்பவத்திற்கு தான் முழுப்பொறுப்பும் ஏற்பதாக அறிவித்தார். இந்நிலையில அவர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்திக்கு உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய விரும்புவதாக கடிதம் அனுப்பியதாக செய்திகள் கசிந்தன. கொல்லபப்ட்ட வீரர்கள் மீது உருவான பரிதாபத்தை தன் பக்கம் ஈர்க்கவே சிதம்பரம் இப்படியான ராஜிநாமா நாடகத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிற நிலையில் இப்போது பிரதமர் மன்மோகன் அவரது ராஜிநாமா கடிதத்தை நிராகரித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version