Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பௌத்த இனவெறி அமைப்பினால் முஸ்லீம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

“றாவய பௌத்த” அமைப்பினால் மாத்தளை நகரில் நாளைய தினம்(26.10.2012) பிற்பகல் 1.30 மணியளவில் பாரியதொரு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராஜபக்ச அரசினால் விதைக்கப்பட்ட நச்சுவிதையே இந்த இனவெறி அமைப்பு.
ஜும்மா தொழுகை முடியும் தருவாயில் இவ் ஆர்பாட்டம் மஸ்ஜிதுக்கு மிகவும் அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பல அச்சங்களை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை இலங்கை பாசிச ராஜபக்ச அரசும் அதன் துணை இனவாத நிறுவனங்களும் முடுக்கிவிட்டுள்ளன. முஸ்லிம்கள் மீதான அதிகரிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும் சிங்கள ஒடுக்கப்படும் மக்களோடும் இணைந்து முன்னெடுப்பதனூடாகவே ராஜபக்ச பாசிசத்தை எதிர்கொள்ள முடியும்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மேலெழும் அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை இன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதன் ஊடாகவே இலங்கை அரசு எதிர்கொள்ள முற்படுகிறது.
1915 ஆம் ஆண்டில் முதலாவது தேசிய இன வன்முறை முஸ்லீம்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டது.
பேரினவாத்திற்கு எதிரான திட்டமிட்ட அரசியலை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் முன்வைக்கத் தவறினால் இன்னும் பல முள்ளிவாய்க்கல்களைச் சந்திக்க நேரிடும்.

Exit mobile version