Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பௌத்த அடிப்படைவாத அமைப்பின் அலுவலகம் பயங்கரவாதி கோதாவினால் திறக்கப்பட்டது

gotaஇலங்கையில் நாஸிச அமைப்புகளுக்கு இணையான அமைப்பாகச் செயற்பட்டுவரும் பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பின் கலாச்சார அலுவலகத்தை காலியில் கோதாபாய ராஜபக்ச திறந்துவைத்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்ச பயங்கரவாத அரசு தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கு எதிரான தேசிய இன வன்முறை ஒன்றைக் கட்டவிழ்த்துவிடத் தயாராகி வருகின்றது. ராஜபக்ச அரசால் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட பொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பானது, முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை கருத்தியல் ரீதியில் திட்டமிட்டு வருகின்றது. ஒடுக்கப்படும் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களோடு இணைந்து சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவுடன் முஸ்லிம்கள் ராஜபக்ச அரசிற்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதை பல அரசியல் சக்திகள் தடைசெய்து வருகின்றனர். முஸ்லிம்களின் பாராளுமன்ற கொழும்பு சார் அரசியல் தலைமைகள் தமது வியாபார நலனுக்காக ராஜபக்ச பயங்கரவாத அரசின் தொங்கு தசையாக ஒட்டிக்கொண்டுள்ளன. இவர்கள் தமிழ் குறுந்தேசிய இனவாதிகளின் தவறுகளைக் காரணம் காட்டி முஸ்லிம்கள் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களுடன் ஒன்றிணைந்து போராடுவதைத் தடுத்துவருகின்றனர்.

Exit mobile version