Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போலிஸ் பிடியிலிருந்து தப்பும் போதே தொழிலாளர்கள் சுடப்பட்டனர்

தென்னாபிரிக்க மரிக்கனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலிசார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் 34 வரையான தொழிலாளர்கள் மரணமடைந்தமை தெரிந்ததே. இது குறித்து போலிசாரின் அறிக்கை முழுமையான பொய் எனத் தெரியவந்துள்ளது. மரணச் சான்று அறிக்கைகளின் அடிப்படையில், கொல்லப்பட்டவர்களில் பலர் முதுகிலேயே சுடப்பட்டு இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் போலீசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற வேளையிலேயே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள் என அறிக்கை தெரிவிக்கிறது. அதேவேளை அமைச்சர் கொலின் சாபனியால் தலைமை தாங்கப்பட்ட Inter-Ministerial Committee (IMC) , அனைத்து மரணச் சான்று பத்திரங்களும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுள்ளது

Exit mobile version