
கேப்டன் எஸ்.எச். அலி விமானத்தை ஓட்டிச் சென்றார். ஆனால் விமானத்தில் யார் இருக்கிறார்கள் என்ற தகவல் கேப்டன் அலிக்கே தெரிவிக்கப்படவில்லை. அது மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.இது குறித்து விமான கேப்டன் அலி கூறுகையில், விமானத்தைத் தயாராக வைத்திருக்குமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே விமானத்தைத் தயாராக வைத்திருந்தேன். வந்தவர் யார் என்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை. அதை ரகசியமாக வைத்திருந்தனர்.1 மணி நேரம் 35 நிமிடங்கள் பறந்து டெல்லியில் தரையிறங்கினோம். விமானத்திலிருந்து அந்த நபர் இறங்கியதும், ஒரு தூதரக காரில் அவரை ஒருவர் அழைத்துச் சென்றார். விமானத்தில் வந்த அந்த நபர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார் என்று கூறியுள்ளார்.கேப்டன் அலி நேர்காணல், கேள்வி: இதையெல்லாம் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிட்டது யார்?பதில்: எங்களுடைய கேப்டன் ஆர்.எஸ்.சோதியிடம் இருந்து உத்தரவு வந்தது. அவர், எங்களுடைய இயக்குனராக இருந்தார். முதல்வர் அல்லது முதல்வரின் செயலாளரிடம் இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கும். அவர்கள், இயக்குனருக்கு உத்தரவிட்டனர். அவர், எங்களுக்கு உத்தரவிட்டார்.கேள்வி: விமானத்தில் வேறு யாரெல்லாம் இருந்தனர்?பதில்: அவர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் கிடையாது.கேள்வி: டெல்லியில் அவரை வரவேற்க யாரெல்லாம் இருந்தார்கள்?பதில்: ஒரே ஒருவர் மட்டுமே… அவரும் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்தார்.கேள்வி: ஆண்டர்சன் எப்படி காணப்பட்டார்?பதில்: மிகவும் களைப்பாகவும், மனக் குழப்பத்துடனும் காணப்பட்டார். விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பின்னர் தான், அது ஆண்டர்சன் என்பதை அறிந்தோம். அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்றார்.மத்திய அரசு தலையீட்டால் அர்ஜூன் சி்ங் உதவினாரா?:இந்த விஷயத்தில் ராஜி்வ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசின் உத்தரவு இல்லாமல், ஆண்டர்சனை அர்ஜூன் சிங் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே பலரும் கருதுகின்றனர்.
1984