
உலக நாடுகள் பலவற்றில் உளவு நிறுவனம் போன்றும், நாட்டின் உறுதித்தன்மையைச் சீர்குலைப்பதிலும் பெரும் பங்காற்றிய USAID ரஷ்யாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டது. 1992 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவிலும் 1964 ஆம் ஆண்டிலிருந்து பொலிவியாவிலும் செயற்பட்டுவருகிறது.
1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்பாட்டுவரும் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்காக அதிகரித்துள்ளது. பல்வேறு திட்டங்களைக் கிராமங்கள் வரை வகுத்துச் செயற்படும் இந்த அமைப்பு பல சிக்கல்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமாகின்றது. புலம் பெயர் நாடுகளிலிருந்து செயற்படும் சிறீலங்கா ஜனநாயக முன்னணி (sri lanka democracy forum(SLDF) ) என்ற தன்னார்வ அமைப்புடனும் இணைந்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. SLDF இன் பொருலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.