Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெளத்த சிங்கள் அரசால் தரைமட்டமாக்கப்பட்ட தேவாலயம்

இலங்கை பெளத்த சிங்கள் பாசிச சர்வாதிகாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள தமிழ்ப் பேசும் இசுலாமியர்களை எந்த நட்ட ஈடுமின்றி வெளியேற்றியது தெரிந்ததே. இதேவேளை சில மசூதிகளையும் தரைமட்டமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறித்து இனியொரு செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் ராஜகிரிய பகுதியில் 4வது ஒழுங்கையில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வந்த கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கடந்த 24ம் திகதி உடைத்து ராஜபக்ச அரசால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் எதிர்ப்பை மீறி நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் இந்த தேவாலயத்தை இடித்து தள்ளியுள்ளனர். நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தேவாலயத்தின் போதகர் திருச்செல்வத்தை காவல்துறையினர், கிறிஸ்தவர்கள் முன்னிலையில் காலால் உதைத்துள்ளனர்.

Exit mobile version