Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பெரியார் வழியில் வந்தது உண்மையானால் தலித்துகளுடன் ஆலயம் நுழைய தமிழக முதல்வர் தயாரா? : டி.கே.ரங்கராஜன் கேள்வி!

ambedkar_periyarவிழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் கடந்த 30ம் தேதி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் மற்றும் தலித்து கள் மீது கொடூரமாக தடியடி நடத்தி, காயப்படுத்தி, பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்ததை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஆர்.ராம மூர்த்தி தலைமை தாங்கினார். யேசுமரியான், பேராசிரியர் அரிவாசகம் முன் னிலை வகித்தனர். கண்டன உரை நிகழ்த்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. “பெரியார் வழியில் வந்ததாக கூறிக் கொள்ளும் கலைஞர், அண்ணாவுக்கு நூற்றாண்டு கொண்டாடும் கலைஞர் தலைமையிலான அரசு சனாதன தர்மத்தை நிலை நாட்டத் துடிக்கும் பாஜக அரசைப்போல, தலித் மக்களின் சட்டப்படியான உரிமையை நிலைநாட்டச் சென்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஎம் தோழர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியது ஏன்?” என்று கேள்வியெழுப்பினார். பெரியார் வழியில் வந்தது உண்மையானால் தமிழக முதல்வரே தலைமையேற்று தமிழ்நாட்டில் 10 கோயில்களில் தலித்துகளுடன், எங்களுடன் நுழையத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசுகையில், கடந்த 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பெரம்பலூர், விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் தலித்துகள் ஆலயம் நுழைய அனுமதிக்கப்பட்டபோது விழுப்புரத்தில் மட்டும் தடுத்து தடியடி நடத்தியது ஏன்? தமிழ்நாடு முழுவதும் தீண்டாமைக்கொடுமை தலைவிரித்தாடுகிறபொழுது திமுக அரசு மவுனியாக வேடிக்கை பார்ப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும் போது, 30ம் தேதி காங்கியனூரில் போராட்டத் திற்கு அமைதியாக சென்ற வர்களை தடுத்து நிறுத்தி ஜி.லதா எம்எல்ஏ உட்பட அனைத்து தலைவர்களை யும் தோழர்களையும் தாக்க உத்தரவிட்ட எஸ்பியை கண்டித்ததோடு, தவறி ழைத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கள் மீது வழக்கு தொடருவோம் என்றும் எச்சரித்தார்.

சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் பி.செல்வ சிங் பேசும்போது, “100 பேரை சிறையில் அடைத்து விட்டதால் எங்கள் போராட்டம் ஓய்ந்து விடாது. மாறாக, மாவட்டத்தின் 100 கிராமங்களில் தொடர்ச்சியாக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார். சிபி எம் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தனும் உரையாற்றினார். நிறைவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பா ளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

Exit mobile version