
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை படுகொலை செய்வதற்கு புலிகள் அமைப்பினர் சதித்திட்டம் தீட்டி வருவதாக வெளியாகியிருக்கும் புலனாய்வுத் தகவல்கள் குறித்து வினவப்பட்ட போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதனைத் தெரிவித்துள்ளார்.
புலிகளின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் உதவியை இந்தியா நாடும் பட்சத்தில் அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.