Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளுக்கு ஆயுதம்: சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் கைது!

weaponதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுத்து உதவியவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிங்கப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஓங்கி இருந்த காலத்தில் அந்த அமைப்புக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க ராகவன் (47) என்கிற பால்ராஜ் நாயுடு என்பவர் முயற்சி செய்தாராம். இவர் சிங்கப்பூரில் ஒரு கட்சியை தொடங்கி அதன் தலைவராக உள்ளார்.

புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுப்பதற்காக இவர் சிங்கப்பூர் தொழிலதிபர் ஹனிபா உஸ்மான் (57) என்பவரை உடந்தையாக வைத்துக் கொண்டு செயல்பட்டாராம். மேலும் இவரிடம் ஏராளமான வெடிபொருள்களும் இருந்ததாக போலீஸôர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் இவரை போலீஸôர் செப்டம்பர் 22ம் தேதி கைது செய்தனர்.

Exit mobile version