Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பி.பி.சிக்கு செய்தி சேகரிக்க தடை

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிலையில் வட பகுதிக்கு பி.பி.சி செல்வதற்கு அரசாங்கம் தடைவித்திருப்பதாக ஏ.ஏன.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆணைக்குழு அமர்வின் செய்திச் சேகரிப்பை தடைசெய்வதற்கான காரணத்தை அரச தரப்பு தெரிவிக்காத நிலையில் இந்த ஆணைக்குழுவானது சுயாதீனமானதல்ல என்று உரிமைகளுக்கான குழுக்கள் தெரிவித்துள்ளன. யுத்தத்திற்கு பின்னர் வட இலங்கை கடுமையான முறையில் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கு செல்வதற்கு வெளிநாட்டவர்கள், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அனுமதி அடிக்கடி மறுக்கப்படுவதாகவும் பி.பி.சி கூறுகிறது.

Exit mobile version