Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டங்கள் அமுல்!

பிலிப்பைன்ஸில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இராணுவ சட்டங்கள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன.

கடந்த மாதம் பலர் படுகொலை செய்யப்பட்ட நாட்டின் தெற்கிலுள்ள மாகுவிண்டனாவோ பிராந்தியத்தின் உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து மணிலாவில் உள்ள மத்திய அரசாங்கம் அதிகாரத்தைப் பிடுங்கியுள்ளது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் இந்த படுகொலை சம்பவத்தில் ஐம்பத்து ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த ஒட்டுமொத்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் அம்படுவா என்ற செல்வாக்குமிக்க உள்ளூர் வாசிகளால் ஒரு கிளர்ச்சி உருவாவதைத் தடுப்பதற்காகவே இராணுவச் சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஆயுதக் கும்பலைச் சேர்ந்த இருபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நிறைய வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அம்படுவா சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்

Exit mobile version