பிரிவினைவாத மற்றும் இனவாத கருத்துக்களை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையிலான சட்டங்கள் இயற்றப்பட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இலங்கையை பயன்படுத்த முடியாத வகையில் சட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பில் புதிய சட்டங்களை உள்ளடக்குவதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை வரையறுக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய அரசியல் சாசன யோசனைத் திட்ட வரைவு தயாரிப்பதற்கு முன்னர் அதன் உள்ளடக்கம் தொடர்பில் நிபுணர்கள் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.