விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்மநாதன் பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது இவ்வாறு கூறியுள்ளார் .
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.