Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனைத் தேசிய வீரராக அறிவிப்பு : இலங்கை அரசு

இனப்படுகொலை நடத்தியவர்களும் அதற்குத் துணைபோனவர்களும் தேசியம் குறித்துப் பேசுகின்ற இக்கட்டான காலகட்டத்தில் வாழ்கிறோம். கே.பியும் அமரிக்க, ஐரோப்பிய, இந்திய ஆதரவு சக்திகளும் இடதுசாரியம் பேசும் அவலத்தைக் காண்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசிய வீரராக பிரகடனப்படுத்த இலங்கை அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசிய வீரராக பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(ஏப்ரல்  முதலாம் திகதி  வாசகர்களின் உணர்வுகளைப் உள்வாங்கிக் கொள்வதற்காக  பதியப்பட்ட  இச்செய்தி  உண்மையற்றது.)

Exit mobile version