Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எவருமே துணை போகக் கூடாது : பிள்ளையான்

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பாவி மக்கள் உட்பட எவருமே துணை போகக் கூடாது. புலிகளின் தமிழீழக் கனவு முற்றாக கலைந்து விட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய ரி.எம்.வி.பியினரின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே கிழக்கு மண்ணை கட்டியெழுப்ப முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற உயர் அரச அதிகாரிகள், விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசினார். தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், போராட்டம் போராட்டம் என்று எமது மக்கள் எதையுமே சாதிக்கவில்லை. தமிழீழம் என்ற அமைப்பிற்கு மாற்றீடாகவே மாகாணசபையை உருவாக்கியுள்ளனர். அதனூடாக எமது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். நீண்ட காலங்களாக நிறைவு செய்ய வேண்டும். நீண்ட காலங்களாக அபிவிரத்தி இன்றி காணப்பட்ட நமது மக்களுக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. விவசாயத்துறையை கட்டியெழுப்புவதன் ஊடாக வறுமையை ஒழித்து வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் என்றார்.

Exit mobile version